Wednesday, December 19, 2012

கடவுள்

கடவுள் என்பது அழகு. அது இன்னிசை.
அது ஒழுங்கு.
அது அன்பு.

கடவுள் ஒரு ஜீவனல்ல.
அனைத்து ஜீவன்களின் தாயாகிய அஜீவன்.
அந்தக் கடவுளை நாம் வழிபடத் தேவையில்லை,
வணங்குவதும் அவசியமில்லை.

கடவுள் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ள முயன்ற வண்ணம் அதனை நமது ஒவ்வொரு மூச்சிலும் ஈடுபடுத்திப் பார்க்க வேண்டும்.

கடவுளுக்கு மனித அடைமொழியை கொடுக்கின்றனர்.
அன்பானவன் என்று உருகி நிற்கின்றனர். அனைத்தும் அறிந்தவன் என சிலாகிக்கிறார்கள். அதிபுத்திசாலி என அதிசயப்படுகிறார்கள். வானளாவியவன் என மலைத்து நிற்கிறார்கள்.

இப்படி மனிதனுக்கான அனைத்து அடைமொழிகளையும் கடவுளுக்கு, எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட கடவுளுக்கு சூட்டுகிறார்கள்.

அஜீவனான கடவுளுக்கு அடைமொழி எதற்கு?

கடவுள் அன்பானதுமில்லை, கொடூரமானதுமில்லை.

கடவுள் தந்தையுமில்லை,
தாயுமில்லை,
எஜமானனுமில்லை,
அடக்கியாளும் அதிகாரியுமில்லை.

கடவுளை படைப்பாளி என்றும் சொல்லமுடியாது.
ஏனெனில் படைப்பு என்பது ஒரு செயல்.
எந்த ஒரு செயலும் நடக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு நேரம் (time) தேவைதானே!
கடவுள் நேரத்தைக் கடந்தது, எனவே படைத்தல் எனும் செயல் நடக்க சாத்தியமில்லை.

கடவுள் 'தேவை' யைக் கடந்தது என்பதை உணராமல் நாம் கடவுளுக்கு சேவை செய்வதாய் பாசாங்கு செய்கிறோம்.
பசி அறியாத, தாகம் கொள்ளாத கடவுளுக்கு நாம் ஏன் பரிமாற வேண்டும் ?!

இயற்கையின் விதிகள்தாம் கடவுள் எனும்போது, விதிகளை கடைபிடிக்காமல் அதை வணங்கி நிற்பதால் மட்டும் யாது பயன்?
கடவுளைப் புரிந்து கொள்வதும், அதன் வழி நடப்பதும்தானே பயன் அளிக்கும்.

'உண்மை' யை நோக்கிச் செல்ல 'இதுதான் பாதை' என்று குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமிருக்கிறதா? உண்மையைத் தேடிச் செல்ல எங்கும் செல்ல வேண்டியதுமில்லை; யாரையும் பின்பற்றிச் செல்லவும் தேவையில்லை.

எங்கெங்கு காணினும் தகதகக்கும் சூரியனைக் காண பாதை ஏதும் உண்டா? நம்மில் உறைந்திருக்கும் கடவுளைக் காண வெளியில் எதற்கு பாதை? தன்னைக் கடவுளின் பிரதிநிதி என்றும், தூதர் என்றும், ஏஜெண்ட் என்றும் சொல்லிக் கொள்பவர்களை நாம் ஏன் கவனிக்க வேண்டும்?

கடவுள் மூன்றாம் மனிதர் மூலமாக செய்திகள் எதைவும் அனுப்புவதற்கான சாத்தியமில்லை. ஏனெனில் கடவுளின் செய்திகள்தாம் நம்மை சுற்றி பரந்துபட்டிருக்கிறதே!
மலைகளில், மரங்களில், கடலில், மீன்களில், நம் சுவாசத்தில்,ஒவ்வொரு அணுவிலும் பிரபஞ்சமாய் விரிந்து கிடக்கிறது கடவுள் எனும் மாசக்தி. மழலையில் கடவுள்,
மனிதனில் கடவுள்,
நாமே கடவுளின் மகத்தான செய்திதான்.

கடவுள் சொரூபியும் அல்ல,
ஜீவனும் அல்ல, பொருளும் அல்ல.
கடவுளுக்கு என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ அல்லது உலகைப் பற்றியோ உணர்தல் ஏதுமில்லை.
அதனால் நம்மைப்பற்றிய கவலையும் அதற்கில்லை. அது பேரழிவை கொடுப்பதுமில்லை, அழிவிலிருந்து நம்மை காப்பதுமில்லை.
அது சட்டதிட்டமாக, விதிகளாக மட்டுமே நம்மிடம் பரவி இருக்கிறது.
விதிகளை கடைபிடித்தால் மட்டுமே வாழ்வு சிறக்கிறது.

கடவுள் யாரையும் தண்டிப்பதுமில்லை, வெகுமதியையோ அல்லது பரிசையோ அளிப்பதும் இல்லை.
அச்செயல்களை நாமேதான் செய்கிறோம், விதிகளை மீறுவது மூலமாக தண்டனை பெறுகிறோம், அல்லது கடைபிடிப்பதன் மூலமாக பயன் பெறுகிறோம்.

தீதும் நன்றும் கடவுள் தர வாரா.
தீக்குள் விரலை வைத்தால் அது சுடுகிறது, அது தீ நமக்குத் தரும் தண்டனையாகாது. சுடுபது தீயின் விதி, அவ்வளவே.

விதிகளை உடைத்த அடுத்த கணமே அழிவு நிகழ்ந்து விடுகிறது.

கடவுள் என்பது எல்லாமே,
கடவுள் என்பது நிஜம்,
கடவுள் என்பது நிரந்தரம்.
கடவுள் என்பது நித்தியம். மற்றவை எல்லாமே தற்செயல்.
அவை யாவும் அநித்தியம்.
அழிந்து போகின்றவை.

ஒவ்வொன்றையும், ஒவ்வொருவரையும் கடவுள் அரவணைக்கிறது.
ஒரு கணம் கூட அதனிடமிருந்து நாம் தப்பிக்க இயலாது. நாம் கடவுளாகிய சட்டத்தை அல்லது விதிகளை மீறிய அக்கணமே நாம் இல்லை என்று ஆகிவிடுகிறோம். ஏனெனில் கடவுள் விதிகளை இயற்றியவரில்லை, விதிகளேதான் கடவுள். நம் உடம்பின் ஒவ்வொரு செல்லும், அணுவும் கடவுளின் விதிகளே!

இன்று மனித இனம் கடவுளை அறியும் முயற்சியில் வெகு தூரம் வந்திருக்கிறது. நமக்கு இன்னும் எதுவும் முழுமையாகப் புரியவில்லை என்பது நிஜம். அது நமக்கு நன்றாகவே புரிகிறது.

ஆனால் நம் முன்னோர்கள் நிறைய நம்பிக்கைகளை வைத்திருந்தார்கள். அவர்களது அறிவு ஓரு எல்லையில் அடங்கிக் கிடந்தது. கிரகங்கள், நட்சத்திரங்கள், பூதங்கள்,பிசாசுகள், தேவதைகள், வானவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுளர்கள், ஆண் கடவுள், பெண் கடவுள், குழந்தை கடவுள், ஒரே ஒரு கடவுள், ஏக இறைவன், ஏகப்பட்ட இறைவன் என்று பலவிதமான நம்பிக்கைகள்.

சில கடவுளர்கள் அன்பே உருவானவர்கள். நரகத்தின் நெருப்பு பற்றி பயமுறுத்தும் கடவுளும் உண்டு. தன்னை மட்டும் வணங்கினால் நித்திய சுகமளிக்க வாக்கு தரும் கடவுள் உண்டு. இவை அனைத்தும் மனித மனத்தின் அதீத கற்பனைகள்.

அறிவியல் அறிமுகமாகாத காலங்களில் அவை நிகழ்ந்திருக்கலாம்.
ஆனால், அறிவியல் ஆட்சி செய்யும் காலமிது.
மிகப்பெரிய சிந்தைனையாளர்கள் அனைவரும் இப்பிரபஞ்சத்தை இயக்கும் பௌதீக விதிகளைத்தான் கடவுள் என்று கருதினார்கள், கருதுகிறார்கள்.
அறிவியல் வளர ,மூளைத்திறன் வளர கடவுள் பற்றிய புரிந்துணர்வும் பரிணமித்து வளர்கிறது.
-----------------------------------------------------------------------------------------
சிந்தனையாளர் பெர்னாட் ஷா இப்படி ஒரு கருத்தைச் சொல்கிறார்.
"All great truths begin as blasphemies"
எல்லா பெரிய உண்மைகளும், கண்டுபிடிப்புகளும் துவக்கத்தில் கடவுள் நிந்தனை என்றே கருதப்பட்டன.
-------------------------------------------------------------------------------------------
அமெரிக்க வானியல் வல்லுநர் கார்ல் சேகன் (Carl Sagan) பிரபஞ்ச விதிகளை கடவுளாக சுவீகரிக்கிறார்.

"The idea that God is an oversized white male with a flowing beard who sits in the sky and tallies the fall of every sparrow is ludicrous. But if by 'God' one means the set of physical laws that govern the universe, then clearly there is such a God. This God is emotionally unsatisfying... it does not make much sense to pray to the law of gravity."


விழும் ஊர்க்குருவிகளை வானத்தில் அமர்ந்த வண்ணம் கணக்கெடுக்கும் உடல் பருத்த, தாடி தவழும் ஆண்தான் கடவுள் என்ற எண்ணமே நகைப்பிற்கிடமானது.

பிரபஞ்சத்தை கட்டி ஆளும் பௌதீக விதிகள்தான் "கடவுள்" என்று அர்த்தப்படுத்தப் பட்டால், அப்படியொரு கடவுள் நிச்சயமுண்டு. உணர்வுப்பூர்வமாக திருப்திப் படுத்த வேண்டிய அவசியமற்ற கடவுள் இவர்.
புவிஈர்ப்பு விதியாகிய g=980 cm/ sec.sec ஐ தொழுவதில் அர்த்தமிருக்கிறதா?
------------------------------------------------------------------------------------------------


அதிகாரப் பூர்வ கண்டிபிடிப்புகள் 1093 க்கு சொந்தக்காரரான அமெரிக்க அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் தனிமனித கடவுளிருப்பதையோ, அந்த கடவுள் தனிமனித வாழ்வை நிர்ணயிப்பதற்கான ஆதாரத்தையோ அல்லது சொர்க நரகங்கள் பற்றிய தேற்றங்களுக்கான அறிவியல் நிரூபணத்தையோ, என் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய எந்த சோதனைக் கூடத்திலும் காணமுடிந்ததில்லை என்கிறார்.


"I have never seen the slightest scientific proof of the religious theories of heaven and hell, of future life for individuals, or of a personal God. [Thomas Alva Edison, Columbian Magazine] "

-------------------------------------------------------------------------------------------------
20 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் இந்த அழகிய பிரபஞ்சத்தின் ஒழுங்கான இணக்கத்தில் தன்னை வெளிபடுத்தும் ஸ்பினோசா கடவுளைதான் நம்புகிறேன்; மனிதப் பிறவிகளின் தலைவிதியைப் பற்றியும், அவைகளின் செயல்களைப் பற்றியும் கவலை கொள்ளும் கடவுளை அல்ல என்கிறார்.

“I believe in Spinoza's God who reveals himself in the orderly harmony of what exists, not in a God who concerns himself with fates and actions of human beings.”

-----------------------------------------------------------------------------------------------


Wednesday, May 12, 2010

6. உயிரின் ஊற்றுக்கண்

'பரிணாமக் கொள்கை' யை அது ஓர் 'உண்மை' யே (FACT) என ஐயமின்றி நிறுவி, அதற்கான ஆதாரத்தை தரும் அறிவியல் கோட்பாடுகள் பின்வரும் பெயர்களை உடையன.

1. Systematics - தாவரவியல், விலங்கியல் இவைகளின் தொகுதியியல்
2. Geopaleontology - புதைபடிமவியல்
3. Biogeography - உயிரின் வாழ்விடவியல்
4. Biochemistry - ஒப்பீட்டு உயிர் வேதியல்
5. Serology - சீரவியல், குருதி நிணநீரியல்
6. Parasitology - ஒட்டிண்ணியியல்
7. Morphology - உருவியல்
8. Immunology - தடுப்புத்திறனியல்
9. Genetics - மரபியல்
10.Embryology - கருவியல்
11.Psychology - உளவியல்
12.Ethology - நடத்தையியல்

இந்த கோட்பாடுகள் தரும் ஆதாரம் ஒரே ஒரு திசையை நோக்கித்தான் கை காட்டுகிறது.
அது...

*மனித இனம் மற்ற உயிரினங்களைப் போன்று பரிணாம வளர்ச்சியின் காரணத்தினால் விளைந்த இனமே.
*மனிதன் என்பவன் மனிதக் குரங்கினம் போன்ற மூதாதையரின் வழித்தோன்றலே.
*மனிதனை 'சிறப்பு மிக்க ஒரு படைப்பு' (special creation) என்று கருதுவது கற்பனையே.


தற்கால அறிவியல் உலகு, 'மனித இனம்' பரிணமித்து, இன்றைய நிலையை எட்டிப்பிடித்திருக்கும் வரிசைக் கிரமத்தை அடையாளப்படுத்தும் போது,

.மர மூஞ்சூறு - tree shrews
.வானரம் (ஒரங்குட்டன்) - lemurs
.தேவாங்கு - lorises
.குரங்கு - monkeys
.மனிதக்குரங்கு - apes

என்ற நிலைகளை (order primates) வரிசைப் படுத்துகிறது.
ஆதலினால் குரங்கினம், மனிதக்குரங்கினம் மட்டுமின்றி வானர இனமும், மரமூஞ்சூறு இனமும் கூட மனிதனின் தூரத்து சொந்த பந்தங்களாகின்றன.
நரம்பு மணடல இயங்கியல் வல்லுநர் (neurophysiologist) JZ Young (1907-1997)
" உணர்ந்துகொள்ள கடினமான ஒர் செய்தி என்னவென்றால் - நமது பாரம்பரியத்தை நேரடியாகவும், தொடர்ச்சியாகவும் பின்னோக்கினால், 'தந்தை-மகன்' என்கிற உறவு மரமூஞ்சூறுகள் மட்டுமின்றி 'ந்யூட்' அல்லது 'சாலமண்டர்' போன்ற உயிரினம், மீன் இனம் மற்றும் 'கடல் அல்லி' ஆகிய இனங்களுடன் கூட தொடர்கிறது." என்ற கருத்தை தனது
"The Life of Vertebrates" போன்ற நூல்களில் சொல்லியிருக்கிறார்.

இந்த பூவுலகம் தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள் முடிந்து, அதனைத் தொடர்ந்து
ஏறக்குறைய ஒரு பில்லியன் ஆண்டைக் கடந்து வேதியல் பரிணாமத்தின் (chemical evolution) விளைவாக 'உயிர்' (life) முதன் முறையாக இவ்வுலகில் எழுந்தருளி இருக்கக்கூடும் என்று அறிவியல் உலகம் கருதுகிறது. ஒபரின் (OPARIN) (1938) எனும் ரஷ்ய விஞ்ஞானி "உயிரின் தொடக்கம்" குறித்த ஆய்வில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவரை 20 ம் நூற்றாண்டின் டார்வின் என அழைப்பர்."The Origin of Life" என்ற தமது நூலில், அவர் தொடக்க கால பூமி - - புறவெளி கதிரியக்கம் (outer space radiation) மற்றும் புவி மூலமுதல் சக்தியின் (terrestrial energy) எதிர்வினை விளைவு - ஆகிய இவைகளின் ஆளுகைக்கு உள்ளாகிய வேதியல் மூலகங்களை (chemical elements) தன்னகத்தே கொண்டிருந்தது என்கிற வாதத்தை வைத்தார்.
ஒபரினின் காலத்தை ஒட்டி, அறிவியலார் மில்லர், பாக்ஸ், பொன்னம்பெருமா ஆகியோர் ஆய்வகத்தில் கரிமமில்லாக் கூட்டுப்பொருளிருந்து (inorganic compound) கரிமக் கூட்டுப்பொருளை (organic compound) உருவாக்கியதில் வெற்றி கண்டனர்.
பெரும்பாலும் சரியாகத்தான் இருகின்றன என ஆய்ந்து ஒப்புக்கொள்ளபட்ட கருத்தாக்கங்கள் சிலவற்றை அவர் உருவாக்கித் தந்துள்ளார். அவைகளைக் கூர்ந்து நோக்கி, திறந்த மனதுடன் புரிந்துகொள்ளும் போது நம் பிறந்த வீடு , வளர்ந்த ஊர், வாழும் சமூகம் இவைகளின் தாக்கத்தால் நிறுவனப்பட்டு நம்மில் உறைந்து நின்று நம்மையே ஆட்டுவிக்கும் சில மாயைகள் விலகக்கூடுமா?

கருத்தாக்கம்-1

வாழும் உயிரினம் (organism), உயிரற்ற ஜடப்பொருள் (matter) இரண்டிற்கும் அடிப்படையில் வேறுபாடு எதுவுமில்லை.
உயிரின் சிறப்பியல்புகளாகக் கருதப்படும் 'உருவமெடுக்கை' (manifestation), மற்றும் 'பண்புகள்' (properties) இவைகளின் சிக்கலான இணைவுப் பொருத்தம்தான் 'பொருளின்' (matter) பரிணாமச் செயல்முறையாக முகிழ்ந்து, பின்னர் 'உயிராக' (life) மலர்ந்தருளியிருக்க வேண்டும்.

கருத்தாக்கம்-2

ஜூபிடர் மற்றும் பிற பெருங்கோள்களின் வளிமண்டலத்தில் சமீப கண்டுபிடிப்பாகக் காணக்கிடைத்த 'மீதேன்' இருப்பின் காரணத்தினால், ஓபரின் சில எடுகோள்களை முன் வைத்தார். அதாவது நாம் வாழும் பூமி தன் பச்சிளம் பருவத்தில் மீதேன், அமோனியா, ஹைட்ரஜன் மற்றும் ஆவி வடிவ நீர் ஆகியவற்றை தன்னகத்தே கொண்ட மிக வலிமை வாய்ந்த 'reducing environment' - ஐ பெற்றிருந்தது. அவைகளே 'உயிர்' பரிணமிக்க மூலபொருட்களாயின.

கருத்தாக்கம்-3

தொடக்க நிலையில் வெறும் வேதியல் கரிமப்பொருட்களின் கரைசல்களே (solutions of organic substances) உருப்பெற்றன. அந்தக் கரைசல்களின் நடத்தையையும், தன்மையையும் அவற்றின் அணுக்கூறுகளும் (atoms), மூலக்கூறு கூட்டமைப்புகளுமே (molecular structures) வழி நடத்தின. ஆனால் படிப்படியான வளர்ச்சி மற்றும் வேதியியல் மூலக்கூற்றுச்சிக்கலின் (complexity) விளைவாக புதிய குணயியல்புகள் வெளிப்பட்டு, சிக்கலற்ற அந்த கரிம வேதியல் (simple organic chemical) உறவின்பால் புதிய வேதியியல் கூழ்நிலை சீர்மை (colloidal-chemical order) பொருத்தி அமைக்கப்பட்டது. இப்படி உருவாகும் புதிய குணயியல்புகளை மூலக்கூறுகளின் இடப்பகிர்வு மற்றும் பரஸ்பர உறவு ஆகியவைகளே தீர்மானிக்கின்றன.

கருத்தாக்கம்-4

இந்த செயல்முறையில் 'உயிரிய ஒழுங்கு வரிசை' முன்னிலை பெற்றுவிடுகிறது. இன்றைய உயிர் பொருட்களின் சிறப்பியல்புகளான போராட்டம், வளர்ச்சி வேகம், தக்கவைக்கும் வாழ்க்கைப்போர் இறுதியாக இயற்கைத் தெரிவு (natural selection) ஆகிய இவைகள்தாம் பொருள் அமைப்பு வடிவத்தை (material organization) தீர்மானிக்கின்றன,

அடிப்படை வேதியல் கரிம சேர்மங்கள் (basic organic chemicals)என்ற நிலையிலிருந்து எவ்வாறு நுண்மையான பவுதிக ஒழுங்கமைப்பாக உருமாற்றம் பெற்று, 'முன்னோடி உயிரணு' வின்( precursers of cells) மூல ஆதியான 'உயிரி'(living things) உருவாகியிருக்கக் கூடும் என்பதை கோடிட்டுக் காட்டினார் ஓபரா.

தொடர் ஒளிவேதிம் நடவடிக்கைகளின் (photochemical activity) காரணத்தால் கரிமமில்லா கலவைகள் (inorganic mixtures) அனைத்தும், புரத மூலக்கூறுகளின் (protein molecules) கட்டுமான செங்கற்களான அமினோ அமிலங்கள் (amino acid) உட்பட, கரிம சேர்மங்களாக (organic compounds) மாறும் இயற்கை விந்தை நடந்தேறுகிறது. காலவேகத்தாலும், வேதியல் தெரிவின் (chemical evolution) விளைவாலும் 'கரிம கட்டுமானங்கள்' (organic systems) நிலைத்தன்மை (stability) மற்றும் சிக்கல்தன்மை (complexity) யின் அதிகரிப்பால் முன்னோடி உயிரணுக்களாக (precursers) பரிமாணம் எடுத்தன.
பின்னர் ஜேம்ஸ் வாட்சன் (James Watson), ப்ரான்சிஸ் க்ரிக் (Francis Crick) ஆகிய நோபெல் அறிவியல் அறிஞர்களின் DNA,RNA - இவைகளின் மூலக்கூறு கூட்டமைப்பின் (molecular structure) வருகைக்குப் பின், ஓபரின் அவர்களின் கருத்து இன்னும் பரவலாக பேசப்பட்டு, செயற்கையாக உயிரை தோற்றுவிக்க இன்னும் சொற்ப காலம்தான் தேவைப்படும் எனும் கருத்து வலுப்பெறத் தொடங்கியது.
சமீப கண்டிபிடிப்பான சிந்தியா (Synthia) அக்கருத்தை மேலும் வலுப்பெறச் செய்துள்ளது.
ஆதலினால்...
உயிரின் ஊற்றுக்ககண் தொட்டுவிடும் தூரத்தில்தானா?
அறிவியலின் வளர்ச்சியும், காலமும்தான் பதில் சொல்ல வேண்டும்.

Friday, April 16, 2010

5.Goldilocks Principle

இந்த பிரபஞ்சத்தில் 'உயிர்' எவ்வாறு பரிணமிக்கத் தொடங்கியிருக்கலாம் என்பது குறித்த ஆராய்ச்சியில் NASA வின் WMAP பின்வரும் கருத்தை முன்வைக்கிறது:-

"Our universe seems to have Goldilocks properties: not too much and not too little -- just enough mass and energy to support the development of life."

முந்தைய பதிவில், (பிரபஞ்சத்தில் உயிரின் பரிணாமம்...) இது தொடர்பாக விவரித்தபோது நண்பர் ரஞ்சித் பின்வரும் கருத்தை பின்னூட்டத்தில் எழுதியிருந்தார்.

//ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் நிறையும் ஆற்றலும் உயிர் உருவாவதற்கான சாத்தியத்தை நிர்ணயிப்பது எவ்வாறு?//

இந்த சந்தர்ப்பத்தில் 'Goldilocks Principle' பற்றி எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.
வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்றில்லாமல் இடைப்பட்ட சரிவிகித நிலைப்பாடு எடுப்பது குறித்து பேசுவதே 'கோல்டிலாக்ஸ் கொள்கை' எனப்படுவது.

இக்கொள்கையை பயன்படுத்தும் சான்றுகள் சில...

1.ஒரு கோள் சூரியனின் மிகத் தொலைவிலும் அல்லாமல், மிக அருகாமையிலும் அல்லாமல் சரியான தூரத்தில் அமைந்தால் மட்டுமே உயிரினம் துளிர்க்க சாத்தியப்படும் என வரையறுக்கிறது 'Rare Earth Hypothesis'. இத்தன்மையுடைய கோளை 'கோல்டிலாக்ஸ் கோள்' என்றே அழைக்கின்றனர். இக்கொள்கை சூரியனுக்கு மட்டுமின்றி எல்லா விண்மீன்களுக்கும் பொருந்தும்.

2. உயிரியல் மருத்துவத்திலும் இக்கொள்கை இடம் பெறுகிறது. உதாரணமாக 'anti-thrombotic புரதம்' மற்றும் 'pro-thrombotic புரதம்' இவையிரண்டின் அளவுகள் இக்கொள்கையை மீறும் பட்சத்தில் உயிர்க்கிறுதி ஆகிவிடும் என அச்சுறுத்துகிறது.

3. இந்தக் கொள்கை 'Goldilocks and the Three Bears' என்ற குழந்தைகள் கதையிலிருந்துதான் உருவானது.

கேள்விகள் தொடர்கின்றன பதில்களைத் தேடி...

Wednesday, April 14, 2010

4.DINOSAUR EXTINCTION






சமீபத்தில் Texas மாநிலத்தில் GLENROSE எனும் ஊரில் உள்ள Dinosaurs Valley State Park-ல் டைனொசார்ஸ்களின் Foot Print ளைக் கண்டு பரவசப்பட்ட கணத்தில்தான் இப்படி எழுதும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
நண்பர் கையேடு எழுதியிருந்த பின்னூட்டத்தின்படி இந்த கருத்தியலில் பல 'தேற்றங்கள்' இருப்பினும் ஒன்றை மட்டுமே நான் குறிப்பிட்டிருந்தேன். அது குறித்த மற்றுமொரு செய்தி.
--------------------------------------------------------------------------------
The Asteroid Theory
--------------------------------------------------------------------------------
The first people to suggest the asteroid theory were the team lead by Luis and Walter Alvarez. It has been calculated that a chondritic asteroid approximately 10km in diameter would contain enough iridium to account for the iridium spike contained in the clay layer. Since the original discovery of the iridium spike other evidence has come to light to support the asteroid theory. Analysis of the clay layer has revealed the presence of soot within the layer. It is thought that the presence of the soot comes from the very large global fires that would have been the result of the large temperatures caused by an impact. Something else that was found within the clay were quartz crystals that had been physically altered. This alteration only occurs under conditions of extreme temperature and pressure and quartz of this type is known as shocked quartz. Despite all of this evidence many geologists did not believe in this theory and many were saying 'show us the crater'.
-----------------------------------------------------------------------------------

அண்மைச் செய்தி ஒன்றையும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.

------------------------------------------------------------------------------------

New Comprehensive Review, a Giant Meteorite Caused the Dinosaur Extinction

For years scientists have debated the cause of the mass extinction that killed off the dinosaurs and a slew of other species on Earth 65.5 million years ago. Now, after reviewing 20 years worth of data and research, an international team of scientists concludes that it was a a huge meteorite strike that triggered the extinction.

In the late 1970s, a geophysicist discovered an impact crater in Yucatán, Mexico, and analysis showed the crater's date of origin to be the end of the Cretaceous. Geologic data indicate that the meteorite that produced the Chicxulub crater -- which lies partially buried beneath the Yucatán Peninsula -- was between 10 and 15 kilometers (6 and 10 miles) in diameter and caused an explosion on Earth that was a billion times more powerful than the Hiroshima atomic bomb. The material that blasted into the atmosphere triggered a global winter, and researchers say much of life on Earth was gone within days.

Dr. Penny Barton, an author of the review, says "Our work lets us visualise the astonishing events of the few minutes after impact. The front of the asteroid hit the Earth while the far side was still out in the upper atmosphere, punching a hole though the Earth's atmosphere. As the asteroid vapourised explosively, it created a crater 30 km deep and 100 km across, with sides as high as the Himalayas. However within only two minutes the sides collapsed inwards and the deepest parts of the crater rebounded upwards to leave a wide, shallow hollow."

"These terrifying events led to darkness and a global winter, resulting in the extinction of more than 70 percent of known species. The tiny shrew-like mammals which were around at that time proved better adapted to survival than the cumbersome dinosaurs, and the removal of these dominant animals paved the way for the radiation of the mammals and eventual emergence of humans on Earth."


During the Cretaceous, the period in geologic time that covers from about 145 million to 65 million years ago, the oceans were populated by marine reptiles and other species, and dinosaurs dominated the land. But at the end of this period, a mass extinction occurred -- which wiped out more than half the existing species on Earth, including the dinosaurs. Scientists refer to this point in the geologic record as the Cretaceous-Paleogene (K/Pg) boundary.

Elisabetta Pierazzo of the Planetary Science Institute and David Crawford of Sandia National Laboratory were the first researchers to create 3-D simulations of the Chicxulub event. Their models showed that the impact's effects on Earth's climate were even more dramatic than previously thought. Although marine and land ecosystems show only minor changes during the 500,000 years prior to the K/Pg boundary, the abrupt decrease in species diversity occurs precisely at the time of the boundary.

Not all scientists support the Chicxulub hypothesis -- some have attributed the climate change and mass extinction to global cooling and acid rain that occurred on Earth as a result of volcanic activity on the Indian subcontinent. But Pierazzo says the sulfur oxides that were ejected into the atmosphere during the volcanic eruptions were distributed over several hundred thousand years, whereas the major biological changes at the end of the Cretaceous era appear to have happened abruptly and at the exact time that the Chicxulub hit.

A paper on the study appears in the March 4 issue of the journal Science.
------------------------------------------------------------------------------------

Friday, April 2, 2010

இத்தனை இயற்சாவு நேர்வு ( Fatality) ஏன்?


தற்செயலா?
விபத்தா?
திட்டமிட்ட செயலா?

இந்த அற்புதமான பிரபஞ்சத்தை இயற்றிய மகா கவிஞன் யார்?
ஆச்சரியமிக்க விண்மீன் மண்டலங்களைப் படைத்த மாபெரும் படைப்பாளி எங்கு வசிக்கிறார்?
பரிணாமத் தொடர்சங்கிலி வண்டியை இயக்கும் அறிவுஜீவி ஓட்டுனர் எங்குள்ளார்? அல்லது எங்குள்ளது?
சூரிய மண்டலத்தில் பூமியைத் தவிர வேறு கோள்களில் உயிரினம் ஏன் இல்லை?
மற்ற கோள்களில் உயிர்களை படைக்க முயன்ற படைப்பாளி அங்கெல்லாம் தோற்றுப் போனாரா?
அந்த படைப்பாளிக்கு நாம் வாழும் பூமியில் மட்டும் அவருடைய படைத்தல் முயற்சியில் வெற்றி கிடைத்ததா?
மற்றெந்த கோளிலும் உயிர் வாழ்க்கைக்கு சாத்தியமில்லை என்பது
ஒரு தற்செயல் நிகழ்வா?

விபத்தா?
திட்டமிட்ட செயலா?
அதாவது நம் பூமியை மட்டும் தேர்ந்தெடுத்து உயிர் கொடுத்தாரா அந்த படைப்பாளி?

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சிறுகோள் - பூமி மோதல் விபத்தில், அப்போது உயிர் வாழ்ந்த டைனொசார்ஸ் இனம் பூண்டோடு அழிந்தது எதனால்?
அவைகளை வேரறுத்து மனிதர்கள் வாழ வழி வகுத்துக் கொடுத்த 'நல்ல மனம்' எது?

இந்த நிகழ்வுகளும் விபத்துதானே!

மலர்களின் மகரந்தச் சேர்க்கையை கவனியுங்கள்.

லட்சோபலட்சம் மகரந்தத் துகள்கள் காற்றின் போக்கில் பரந்து திரிந்து பின்னர் தற்செயலாக ஒரு சில சூல்மூடிகளை மட்டும் கருவுறச் செய்வது ஏன்?
இதே லாட்டரிச் சீட்டு விந்தை, மனித விந்துக்களின் ஓட்டப் பந்தயத்திலும் ஒரே ஒரு விந்து மட்டும் கருமுட்டையுடன் சேரும் 'விபத்து' நிகழ்கிறதே எதற்காக?
மற்ற கோடிக்கணக்கான விந்துகள் என்னவாயிற்று?
அவற்றின் தலைவிதி என்ன?
அவைகள் 'படைக்கப்பட்டவை' என்று சொல்லும் பட்சத்தில் ஏன் 'படைக்கப்பட்டன'?
'மரபியல் நோக்கியலு' க்குரிய வடிவமைப்பு (teleological design) இருக்கிறது என்று காரணம் சொல்லப்பட்டால் இத்தனை வீணடிப்பு ஏன்?
சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் லட்சக்கணக்கான உயிரினங்கள் மரணம் தழுவுவது யாருடைய கருணையால்?
இத்தனை இயற்சாவு நேர்வு ஏன்?

Why this much of fatality?

இத்தனை கேள்விகளுக்கும் பதிலென்ன? பதில் இருக்கிறதா!?

பிரபஞ்சத்தில் உயிரின் பரிணாமம்...

பிரபஞ்சத்தின் தொடக்கமும் பரிணாமமும்:


WMAP என்று அழைக்கப்படும் நாசா (NASA) வைச் சார்ந்த Wikinson Microwave Anisotropy Probe என்ற அமைப்பு இந்த பிரபஞ்சத்தின் வயது 13.6 பில்லியன் ஆண்டுகள் எனக் கண்டறிந்துள்ளது. அந்த நிறுவனம் மிக அரிதானதும், துல்லியமானதுமான அண்டவெளித் தகவல்களை உருவாக்கிய பெருமை மிக்கது.
இந்த பிரபஞ்சம் கற்பனைக்கு எட்டாத அபரிமிதமான அடர்வுடனும், வெப்பத்துடனும் தொடங்கியது. அளப்பரிய இந்தத் துவக்க சக்தியான தொட்டிலிலிருந்துதான் அனைத்து உயிர்களும் பரிணமித்தன. பிரபஞ்சம் உருவான முதல் கணத்தில் ஆரம்பத் துகள்கள் உருவாக்கப்பட்டு இறுதித் துகள் வேகத்தால் அழிக்கப்பட்டன.

அந்த சமயத்தில் matter மற்றும் antimatter இரண்டும் ஒன்றையொன்று சந்தித்து அழித்துக் கொண்டதால் ஒளி உருவானது. இந்த போராட்டத்தின் இறுதி கட்டத்தில் antimatter ஐ விடவும் சற்றே அதிகமான matter தப்பி பிழைத்ததால், இயற்கையின் பயணத்தில் கொஞ்சம் matter ம் அறவே இல்லாத antimatter ம், எக்கச்சக்கமான ஒளியும் பிரபஞ்சத்தில் தங்கிவிட்டன. தற்போது matter ஐ காட்டிலும் ஒரு பில்லியன் மடங்கு ஒளி (light) இருப்பதாக WMAP அளவிட்டிருக்கிறது.

நாம் செய்யப்பட்டது எதனால்? ஹைட்ரஜனாலா?

இப்பிரபஞ்சத்தின் 4.6% திண்மமும், சக்தியும் அணுக்களில் அமைந்திருப்பதாய் WMAP தீர்மானம் செய்துள்ளது. எல்லா உயிரினங்களும் இந்த 4.6% பங்கீட்டிலிருந்துதான் வந்தன.
பிரபஞ்சம் ஆரம்பமான காலகட்டத்தில் ஹைட்ரஜன், ஹீலியம், லிதியம் ஆகிய மூன்று வேதியல் மூலகங்கள் மட்டுமே உருவாகின. இவை மூன்றும்தான் periodic அட்டவனையில் ஆக குறைந்த எடையுள்ள அணுக்களாகும். லிதியத்தை விடவும் அதிக எடையுள்ள மூலகம் தோன்றாமல் இருந்திருக்கவும், உயிர் உருவாகாமல் இருந்திருக்கவும் வாய்ப்புள்ள ஒரு பிரபஞ்சத்தை கற்பனை செய்யும் சாத்தியம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நம் பிரபஞ்சத்தில் அப்படியொரு நிகழ்வு நடக்கவில்லை.
நாம் carbon ஐ அடித்தளமாகக் கொண்ட உயிரினம். நீரால் (H2O) ஆகியும் இருக்கிறோம், நீரை அருந்துகிறோம், Oxygen ஐ சுவாசிக்கிறோம்.

Carbon ஆகட்டும் அல்லது Oxygen ஆகட்டும் பெருவெடிப்பு சமயத்தில் உண்டாகவில்லை. மிகவும் பின்னால் அவை விண்மீன்களில்தாம் உருவாகின. நாம் விண்மீன்கள் என்றழைக்கும் Nuclear Fusion Reactors ல் தான் carbon மற்றும் oxygen ஆகியவைகள் உருவாகின. ஆரம்ப கால விண்மீன்கள் மிகவும் பிரமாண்ட அமைப்பு உள்ளதாய் இருந்தாலும், அவை குறுகிய காலமே வாழ்ந்தன. அவைகளின் hydrogen, helium, lithium களை அவைகளே உட்கொண்டு அவைகளை விடவும் கனமிக்க மூலகங்களை உண்டாக்கின. இந்த நட்சத்திரங்கள் 'படார்' என வெடித்து உயிரை விட்டபோது, உயிரின் மூலப் பொருட்களாகிய oxygen மற்றும் hydrogen இந்த பிரபஞ்சம் முழுதும் இரைந்து பரவின. கனமிக்க இந்த மூலகங்கள் அடர்ந்து, பதங்கமாகி புதிய நட்சத்திரங்களாகவும், கோள்களாகவும் உருவெடுத்தன. 'உயிர்' தொடங்க கால்கோள் இட்டது இந்த கட்டத்தில்தான். இந்த நிகழ்வுகள் எங்கே, எப்படி நிகழ்ந்தன என்பதை புரிந்து கொள்ளும்போது, இப்பிரபஞ்சத்தில் உயிரின் பயணத்தைக் காட்டும் இன்னொரு ஜன்னல் திறக்கும்.

பெருவெடிப்பு நிகழ்ந்து 400 மில்லியன் ஆண்டுகள் கழித்தே இப்பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரங்கள் எழுந்தருளின என்ற முடிவிற்கு WMAP வந்தது. அப்படியெனில் இந்த நட்சத்திரங்களை எது செய்தது?

நட்சத்திரங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் (galaxy ) அமைத்த இயக்கம் முதலிலேயே வந்தாலும் அது நுட்பமான முறையில் தன்னை வெளிப்படுத்தாமல்தான் இருந்தது. பிரபஞ்சத்தின் முதல் கனத்தின் தொடக்கத்திலேயே sub-atomic scale activity மற்றும் tiny "quantum fluctuations" ஆகிய இவை இரண்டும் பிரபஞ்சத்தை விண்மீன் உருவாக்கம், அவற்றில் உயிர் தோற்றம் நோக்கி விரட்டத் தொடங்கின. ஒரு நொடியின் குறைவான நேரத்தில் கடுகளவு பிரபஞ்சம் random quantum fluctuations- ன் புண்ணியத்தால் துளி அளவு quantum உலகத்திலிருந்து பூதாகர பெரும் அண்டமாக ஊதி உப்பிவிட்டது என்கிறது inflation theory.

இதை நாம் எப்படி நம்பி ஒப்புக்கொள்ள முடியும்?


ஏனெனில் பெருவெடிப்பிற்குப் பிறகு ஏற்பட்ட (microwave afterglow light) ஒளி தகதகப்பு அசாதாரணமாக விண்ணெங்கும் ஒரே சீரான வெப்பத்துடன் பரவிக் கிடக்கிறது. ஒரு துளியூண்டு துண்டம் உப்பி மிகப் பிரமாண்டமாய் வெடித்துப் பரவினால் மட்டுமே இந்த பிரபஞ்சத்தின் பல்வேறு பாகங்களும் சமநிலைக்கு (Equilibrium) ஒரே கணத்தில் வந்திருக்க முடியும். இந்த சீர்மை (isotropy-uniformity) நிகழ்ந்திருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி பிரபஞ்சத்தின் ஆரம்ப கால வரலாற்றில் பல்வேறு பகுதிகளும் ஒன்றுக்கொன்று thermal equilibrium நிலையிலிருந்து வெகு வேகத்துடன் உப்பி விலகியிருக்க வேண்டும். மேலும் Inflation Theory ன் மற்ற ஊகங்களும் உண்மை என்று தெரிவதாகவும் WMAP உறுதி செய்கிறது.


பிரபஞ்சம் உப்பி பெரிதாகிய சமயத்தில் துளிதுளியான quantum fluctuations அனைத்தும் வளர்ந்து quantum variations களாக matter என்ற மாற்றங்களாக இடம் பெயர்ந்து உருவெடுத்தன. இந்த tiny amount உருவாக gravity எனும் ஈர்ப்பு விசை உறுதுணையாய் உள்ளது. ஈர்ப்பு விசை இயற்கையின் ஓர் அடிப்படையான விசை மட்டுமின்றி இந்த பிரபஞ்சத்தின் பிரமாண்ட அமைப்பு பரிணமிக்கக் கட்டுப்படுத்தும் விசையும் ஆகும். ஈர்ப்பு விசை மட்டுமில்லாதிருந்தால் விண்மீன்களுமில்லை, கோள்களுமில்லை. அதற்கு பதிலாக குளிர்ந்து போன தூசு துகள் மண்டலமே மிஞ்சியிருக்கும். Quantum fluctuation துவக்கி வைத்த variation எனும் மாற்றங்கள் நிகழாமல் இருந்திருந்தால் துளித்துளியாய் உள்ள matter கள் பெரும் அளவான matter களாக அடர்வு பெற ஈர்ப்பு விசையின் துவக்கம் நடந்திருக்காது. ஈர்ப்புவிசையின் இறுதியில் உருவானவைதான் விண்மீன் மண்டலங்கள் (galaxies) , விண்மீன்கள் மற்றும் கோள்கள். WMAP ன் தேடல் வரைவு செய்த விளக்கமான ஏற்ற இறக்கங்கள் (fluctuations) தாம் உயிரின் தொட்டிலும் ஆகும், தொழிற்சாலையும் ஆகும்.

உயிரை சமைக்க அண்டத்தின் சேர்வை விகிதம்:


அண்டத்தின் உறுப்புகளின் நுட்பமான சேர்வை விகிதமே உயிரின் பிறப்பாகும். ஆரம்ப நிலையில் பிரபஞ்சத் துகள்கள் ஒன்றுக்கொன்று மிகக் குறைந்த அளவே வேறுபட்டிருந்தன. எனவே மிகப் பெரிய அளவிலான மாற்றங்களுடன் உருமாற நீண்ட கால அவகாசம் தேவையாயிருந்தது. ஏன் இந்த பிரபஞ்சம் ஒரு வினாடியோ, ஒரு ஆண்டோ அல்லது ஒரு லட்சம் ஆண்டுகளோ மட்டுமே நிலை பெற்றிருக்கவில்லை?
matter, energy, time ஆகிய இவைகளை கட்டியாளும் அடிப்படை விதிகளே பிரபஞ்சத்தின் வயதை கட்டுப் படுத்துகிறது. நாம் பரிணாம வளர்ச்சி அடைந்து இவ்வுண்மையை உணர்ந்து கொள்ள ஏறக்குறைய 13.7 பில்லியன் ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கிறது.

இந்த பிரபஞ்சம் எவ்வளவு காலம் நீடிக்கிறது, மற்றும் எப்படியெல்லாம் பரிணாமம் பெறுகிறது என்பதெல்லாம் பிரபஞ்சத்தின் உள்ளடக்கமான energy, matter ஆகிய இவைகளைப் பொருத்தே தீர்மானமாகும். நமது பிரபஞ்சத்தைக் காட்டிலும் மிக அதிகமான matter உள்ள ஒரு பிரபஞ்சம் தனது ஈர்ப்பு விசையின் விளைவாக வெகு வேகமாக, உயிர்கள் தோன்றுவதற்கு முன்னரே, இடிந்து தொலைந்து போயிருக்கக் கூடும். நீண்ட காலம் உயிர் வாழ்ந்த பிரபஞ்சத்தில் விண்மீன்கள் தோன்ற தேவையான திண்மம் இல்லாமல் போயிருக்கக்கூடும். மேலும் WMAP இன்னொரு விஷயத்தையும் உறுதி செய்கிறது. Dark energy எனப்படும் கருஞ்சக்தியின் இருப்பும், அது ஒரு எதிர் ஈர்ப்பு விசையாக இயங்குவதும், இந்த பிரபஞ்சத்தின் விரிவை வேகப்படுத்துகிறது என்பதையும் உறுதிப் படுத்துகிறது. இந்த கருஞ்சக்தி முன்னமே தலைதூக்கி முதன்மை வகித்திருக்குமேயானால் இப்பிரபஞ்சம் இன்னும் துரிதகதியில் உப்பி, விரிவடைந்து உயிர் உருவாகும் சாத்தியத்தை அதிகப்படுத்தியிருக்கும். மிகக் குறைந்துமில்லாமல், மிக அதிகமும் இல்லாமல் கனக்கச்சிதமான mass ம் energy யும் கொண்ட நம் பிரபஞ்சத்தின் அழகுதான் உயிர் வளர சாதகமாயிற்று.

நம்மை விட புத்திசாலி இருப்பாரா?


இப்பிரபஞ்சத்தில் வேறு ஏதாவது இடத்தில் வேறு யாராவது புத்திஜீவிகள் இருக்க வாய்ப்பிருக்குமா? நமக்குத் தெரியவில்லை. ஆனால் இருக்க வாய்ப்பில்லை என சொல்ல காரணமும் ஏதுமில்லை. நாம் நன்கு வாழ்ந்து கொண்டிருப்பதே இப்பிரபஞ்சம் நல் வாழ்க்கைக்கு உகந்தது என்பதற்கான அத்தாட்சி. அறிவுமிக்க ஜீவன் பரிணமிக்க எத்தனை எத்தனை தடைகள்! அப்படித் தோன்றினாலும் அவை தொடர்ந்து நிலை கொள்ள எத்தனை அச்சுறுத்தல்கள்!! உயிரினங்கள் அழிந்து போகும் சாத்தியத்தை தொடர்ந்து எதிர்கொள்கின்றன. உயிர் நிலைக்க நீர் வேண்டும். சக்தி வேண்டும். carbon வேண்டும். நீரை கானல்நீராக்கும் சுற்றுப்புற பேரழிவு உயிருக்கு இறுதியாகிவிடும். மற்ற சுற்று சூழல் பேரழிவுகளோ மிகப் பெரிய அச்சுறுத்தல்கள். நம் பூமியில் பிரமாண்ட அளவிலான விண்மீன் எரிகற்கள் மோதியதால் உயிர்களின் பேரழிவு நிகழ்ந்திருக்கக்கூடும் என்று நம்பப் படுகிறது. அண்டவெளியின் கடுமையான கதிரியக்கம் பூமியின் வளிமண்டலம் மற்றும் காந்தபுலத்தால் தடுக்கப்படுகிறது. சூழ்நிலை நில்லாமை (environmental instabilities) பனிஊழி (ice age) ஏற்படக் காரணமாகிறது. ஒருநாள், இன்றிலிருந்து ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நமது பகலவன் எரிந்து காணாமல் போய் விடும். மற்ற கனம் மிகுந்த விண்மீன்கள் அனனத்தும் supernovae எனப்படும் ஊழிவெடி யால் உயிரை விட்டுவிடும். பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் மிக அருகில் நிகழும் supernova ஊழிவெடியின் கதிரியக்கதால் அழிந்து போகக் கூடும்.
இந்த கருஞ்சக்தி நம் பிரபஞ்சத்தை ஒரு குளிர்ந்த பனிப் பாயைப் போல் விரித்து விடக்கூடும். கருஞ்சக்தி இன்னதென்று நமக்குத் தெரியாததால் இந்த கணிப்பு தவறானதாகவும் இருக்கலாம்.
பிரபஞ்சத்தில் வேறு உயிரினம் தேடும் பணியில் பலர் ஈடுபட்டு உள்ளனர். ஒன்று நாம் அதை கண்டுபிடிக்கலாம் அல்லது நம்மை அது கண்டுபிக்கலாம். வேற்று உலக அறிவுஜீவிகளை தேடும் பணி (Search for Extraterrestrial Intelligence SETI) தொடருகிறது. ஒருநாள் நமக்குத் தெரிய வரலாம், மனிதர்களாகிய நாம் இப்பிரபஞ்சத்தில் தனிமையில் இருக்கிறோமா அல்லது வேறு யாராவது இருக்கிறார்களா என்று. எங்கிருந்தோ சமிக்ஞை வரலாம். தேடல் தொடருகிறது.
WMAP ன் பெருவெளி தேடலில், அண்டவெளி நுண்ணலை பின்னணியில் (Cosmic Microwave Background) துவக்க கால பிரபஞ்சத்தின் density fluctuations எனும் அடர்வு ஏற்ற இறக்கத்தை ஆராய்ந்து அளந்து, அறிந்து கொள்கிறோம். உயிர் தோன்ற ஏதுவான மூலகங்களை புரிந்து கொள்கிறோம். இனி வருங்காலத்தில் புதுத் தேடலில் நம் முயற்சிகள் மேம்படலாம். நாசா வின் Einstein Inflation Probe போன்ற அமைப்பு இப்பிரபஞ்சத்தின் ஆரம்ப உப்பலின் போது ஏற்பட்ட ஈர்ப்பு விசையின் குழப்பத்தை ஆய்ந்து அறியலாம். அடங்காத அறிவுத் தேடல் மனித குலத்தின் சிறப்பியல்புதானே!

http:-//map.gsfc.nasa.gov/universe



பெரு வெடிப்பு அண்டம்



பெரு வெடிப்பு

நம் பிரபஞ்சத்தின் தோற்றமும், பரிணாமமும் குறித்த பல்வேறு கொள்கைகளில் "பெருவெடிப்பு" (Big Bang) கொள்கையே பெருவாரியாக ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கை.

அந்தக் கொள்கை என்னதான் சொல்கிறது?

நாம் பார்க்கும் இந்த பிரபஞ்சப் பகுதி, 12 முதல் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சொற்ப மில்லி மீட்டர் நீள அகலம் கொண்ட, சிறு துண்டம்தான் என்பதே அக்கொள்கையின் அடிப்படை.

கணக்கிட முடியாத அடர்வும், வெப்பமும் கொண்ட இத்துண்டம், அதன் நிலையிலிருந்து மாறி விஸ்வரூபமாய் வெடித்து, பரந்து விரிந்து கிடக்கும், நாம் வாழும் இந்த உலகத்தை தன்னகம் கொண்ட அண்ட அகிலமாக உருமாறியிருக்கிறது. அந்த அடர்வும், உஷ்ணமும் கொண்ட மிச்ச மீதிகளை நம்மால் இன்றளவும் காண முடிகிறது. அந்த மிச்சங்கள் மிகக்குளிர்ந்த அண்ட சராசர நுண்ணலை கதிர் வீச்சு பின்புலங்களாக (cosmic microwave background radiation) இப்பிரபஞ்சத்தில் பரவிக் கிடக்கின்றன. இக் கதிர் வீச்சு வானம் முழுதும் சீரான வெளிச்ச தகதகப்பாக மிளிர்வதை நுண்ணலை கண்டுபிடிப்பான்களால் (microwave detectors) பார்க்க முடிகிறது.

பெருவெடிப்பு கொள்கையின் அடிப்படைகள்:

1. ஜெனரல் தியரி ஆஃப் ரிலேடிவிடி

முதன் முதலாக ஐன்ஸ்டீனின் புதிய புவிஈர்ப்புக் கொள்கை பொதுமை சார்பியல் தேற்றமாக 1916 ல் உருவானது. ஐஸக் நியூட்டனால் 1680 ல் உருவாக்கப்பட்ட புவிஈர்ப்புக் கொள்கையின் பொதுமைப் படுத்தப்பட்ட புதிய கொள்கையே இந்த தேற்றம் என்று கூறலாம். நியூட்டனின் விதி யானது நிலைகொண்டுள்ள பொருளுக்கும் மற்றும் ஒளியைக் காட்டிலும் குறைவான வேகத்தில் நகரும் பொருளுக்குமே பொருந்தும். புவிஈர்ப்பு எனப்படுவது புவிஈர்ப்பு 'புலம்' (field) என விவரிக்கப் பட்ட முறையிலிருந்து நீங்கி, அது பெருவெளி (Space) மற்றும் காலம் (Time) இவற்றின் உருமாற்றம்தான் என்று கருதுவதே பொது சார்பியலின் ஆதார கருத்தாக்கமாகும். நியூட்டன் தியரியால் விளங்க முடியாத புதிர்களாய் இருந்த மெர்க்குரி கோளின் பாதையில் காணப்பட்ட விநோதமும், சூரிய ஒளியின் வளைவும் ஜெனரல் தியரி ஆஃப் ரிலேடிவிடியால் புதிர் விடுவிக்கப்பட்டு விடை காண முடிந்தது. சமீப காலங்களில் ஐன்ஸ்டினின் தியரி பல கடுமையான சோதனைகளை வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

2. தி காஸ்மலாஜிகல் ப்ரின்ஸிபிள்.

ஜெனரல் ரிலேடிவிடி தியரி அறிமுகமான பிறகு ஐன்ஸ்டீன் உட்பட பல விஞ்ஞானிகள் புதிய புவிஈர்ப்பு எந்திரவியலை ஒட்டு மொத்த பிரபஞ்சத்திற்கும் ஏற்புடையதாக்க முடியுமா எனற ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில்தான் matter எங்கனம் பிரபஞ்சத்தில் பரந்து விரிந்து கிடக்கிறது என்பது குறித்த ஓர் அநுமானம் (assumption) தேவைப்பட்டது. மிகக் குறைந்த பார்வை வீச்சுடன் (vision) இப்பிரபஞ்சத்தின் உள்ளடக்கத்தை பார்க்கையில் அது எல்லா இடத்திலும், எத்திசையிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத்தான் காணப்படும் என்பதே அந்த அநுமானம்.

அதாவது மிகப் பெரிய அளவீட்டு சராசரியில் இப்பிரபஞ்சத்தின் matter சமச்சீராகவும் isotropic ஆகவும் இருக்கிறது. இதைத்தான் "பிரபஞ்சக் கொள்கை" (Cosmological Principle) எனக் கூறப்படுகிறது. பரந்து விரிந்த விண்மீன் மண்டலங்களை (galaxies) கூர்ந்து கண்கானிப்பதன் மூலம் இப் பிரபஞ்சக் கொள்கை அநுமானம் தொடர்ந்து சோதனைக்கு உள்ளாக்கப் படுகிறது.

வான் வெளியில் 30 degree வீச்சில் இந்த விண்மீன் மண்டலம் ( galaxy ) சீராகப் பரந்து கிடக்கும் காட்சியை மேலுள்ள படத்தில் காணலாம். மேலும் பெருவெடிப்பின் எச்சத்தின் காரணத்தால் பரவிக் கிடக்கும் உஷ்ணம் அதாவது Cosmic Microwave Radiation வான் மண்டலத்தில் ஒரே சீராகப் பரவியுள்ளது என்பதும் விளங்கும். மேலும் இந்த உண்மை, வெகு காலத்திற்கு முன்பு கதிர் வீச்சை உருவாக்கிய வாயு சீராக பகிர்ந்தளிக்கப்பட்டது எனும் கருத்திற்கு ஆதாரம் சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

பெருவெடிப்பு கருத்தியலுக்கு இந்த இரு சிந்தனைகளும் ஆதார ஸ்ருதிகளாய் அமைந்துள்ளன. மேலும் கண்கூடாய் தெரியும் பிரபஞ்ச உண்மைகளைப் பற்றிய குறிப்பிடத்தக்க கருத்தாக்கங்களை உருவாக்க வழி வகுக்கும் சிந்தனையாகவும் அமைந்துள்ளன.

http://map.gsfc.nasa.gov/